adv

Sunday, April 10, 2011

கிரிக்கெட் வீரர்களுக்கு உலக கோப்பை வென்றதற்கு கோடிகளில் பரிசு


கிரிக்கெட் வீரர்களுக்கு உலக கோப்பை வென்றதற்கு கோடிகளில் பரிசு கொடுக்கட்டும் பிசிசிஐ மற்றும் தனியார் நிறுவனங்கள் அது அவர்களுக்கு விளம்பரம் சரி அரசாங்கம் ஏன் கோடிகளை கொட்டி கொடுக்க வேண்டும் . அவர்கள்தான் நிறைய சம்பாதித்து விட்டார்களே நீங்கள் யார் பணத்தில் கொடுக்கிறீர்கள் மக்கள் வரிபணத்தில் சரி எல்லா விளையாட்டுக்கும் இப்படி கொடுப்பீர்களா  இல்லையே . ஏன் உங்களுக்கும் விளம்பரம் தேவையா இப்படி இருந்தால் மற்ற விளையாட்டுக்கள் எப்படி பிரபலமாகும் ஒலிம்பிக்ல்  நாம் எப்படி பதக்கம் வாங்குவோம் .இப்போது சிறிய வயதில் விளையாட போகும் போதே பணம் கொழிக்கும் கிரிக்கெட் விளயட்டைதானே தேர்வு செய்கிரர்கள்  பெற்றோர்கள் தனியார் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை பெருக்க கிரிக்கெட்டுக்கு பணத்தை வாரி இறைத்து விளம்பரம் செய்து கொள்ளட்டும் அரசாங்கம் இப்படி செய்வது என்ன நியாயம் . கிரிக்கெட் கூட மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு பணம் பாரபட்சமின்றி கொடுத்து வாழ்த்துங்கள் நாம் ஒலிம்பிக்ல் பதக்கம் கண்டிப்பாக வாங்குவோம்

1 comment:

  1. கருணாநிதி எல்லா விழாக்களிலும் எதுக்கு ரஜினிகாந்தை கூடவே வச்சிருக்காரு? ரஜினி ரசிகர்களைக் கவரவேண்டும் அவர்களது ஓட்டுகளைப் பெறவேண்டும் அவ்வளவே. நல்லதோ கேட்டதோ, இந்தியர்கள் கிரிக்கெட்டை பைத்தியம் போல விரும்புகிறார்கள், எனவே கிரிக்கெட்டிற்கு தரும் ஆதரவு, கிரிக்கெட் ரசிகர்களைத் திருப்தி படுத்தும், அவர்களது வாக்குகளைக் கவர உதவும். இந்த காரனத்துக்காத்தான், ராகுல், பிரியங்கா, சோனியா எல்லோரும் மைதானத்திர்க்கே வந்து மேட்ச் பார்க்கிறார்கள், ஏன் சில சமயம் பாகிஸ்தானுக்கே நேராக போயும் பார்க்கிறார்கள். நடிகர்களும் மேட்ச் பார்க்க வருவதும் தங்களை தேச பக்தர்கள் என்று காட்டிக் கொள்ளத்தான்!! இதன் மூலம் ரசிகனுக்கு அவர்கள் மேல் உள்ள அபிமானம் கூடும்.

    ReplyDelete