adv

Monday, April 18, 2011

ATM இல் பணம் எடுக்கும் போது உஷார்


என் நண்பர் ஒருவர் மதுரை எல்லிஸ் நகரில் உள்ள சென்ட்ரல் பேங்க் atm  ல்  பணம் எடுக்க சென்றார் .நேரம் காலை 9 . 30  மணி ரூபாய் 5000 எடுக்க கார்டை உள்ளே போட்டார் .ஓகே கார்ட் வெளியில் வந்தது பணம் வெளியே வரும் நேரத்தில் machine   ஆப் காரணம் அந்த ஏரியாவில் 9 மணி முதல் பவர் கட் மீண்டும் 12 மணிக்குதான் வரும் atm  back up ல் அரை மணி நேரம் ஓடியுள்ளது நண்பரின் நேரம் சரியில்லை போலும் . அவர் atm ல் கார்ட் போட்டபோது பவர் கட் அவர் அலறி அடித்து கொண்டு சென்ட்ரல் பேங்க் சென்றார் அப்படியா என்று கேட்டவர்கள் கரண்ட் வந்தவுடன் உங்கள் பணம் வரும் போய் பாருங்கள் என்று சொல்லியுள்ளனர் சரி என்று போய் பார்த்தால் பணம் வரவில்லை மீண்டும் அதே பேங்க்க்கு நண்பர் செல்ல நீங்கள் கனரா வங்கி  atm பயன்படுத்தி இருக்குறீர்கள் அங்கு சென்று கம்ப்ளைன்ட் செயுங்கள் என்று சொல்லியுள்ளனர் சரி என்று அந்த வங்கியில் சென்று சொல்லியுள்ளார் பதிவு செய்து கொள்கிறோம் ஒரு மாதத்திற்குள் தெரியும் என்று சொல்லியுள்ளனர் .

பாருங்கள் நம் பணத்தை வங்கியில் போட்டு எடுப்பதற்கு இவ்வளவு பிரச்சினை    பவர் போனவுடனே atm  இயங்காது என்று அறிவிப்பு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை . பாருங்கள் நண்பர்களே நம் நாட்டில் கரண்ட் போகும்போது atm ல் பணம் எடுக்காதீர்கள் ஜாக்கிரதை என் நண்பர் பணம் கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் உள்ளார் .



1 comment: